பொன்னைக் கொண்டு
உரைகல் மீதே
நிறம் எழ உரைத்தாற் போல்
உன்னைக் கொண்டு
என் நாவகம்பால்
மாற்றின்றி
உரைத்துக் கொண்டேன்
உன்னைக் கொண்டு
என்னுள் வைத்தேன்
என்னையும் உன்னிலிட்டேன்
என்னப்பா!
என் இருடீகேசா!
என்னுயிர்க் காவலனே!
பெரியாழ்வார் திருமொழி
ஐந்தாம் பத்து
நான்காம் திருமொழி
பெரியாழ்வார்
பொன்னின் தரம் பார்க்க
கல்லில் உரைப்பது போல,
என் நாவாகிய கல்லில்,
உன் நாமங்கள் என்ற
பொன்னை,
உரைத்தது மட்டுமின்றி,
அனுபவிப்பதற்காக
அதனை விழுங்கி
என் நெஞ்சமதனை
நிறைத்துக் கொண்டேன்!!
இப்போது நீ
என் மனத்தில்
முழுவதாய் உரைந்திருக்கிறாய்!!
இதுவன்றோ என் பாக்கியம்!!
இதுதானே உச்ச சந்தோஷம்!!
என் தந்தையே!
என் ஹ்ருஷிகேசா!
என் ஜீவனின் காவலனே!
என்னையும்
உன்னிடத்தில் முழுமையாக
சமர்ப்பித்து விட்டேன்!!
-----------------------------
#thiruparkadal
#திருப்பாற்கடல்
#ஆன்மிகம்
#வைணவம்
#ஆழ்வார்கள்
#Paamaalai
#பாமாலை
...
https://www.youtube.com/watch?v=PR5O19CcdW0