திருமதி.கமலவல்லி ஸ்ரீனிவாசன்..
எழுபது வயதைக் கடந்தவர்..
இனிமையாகப் பாடக் கூடியவர்..
கரியமாணிக்கம் அவரது ஊராகும்..
அவரது ஊரிலே அந்நாளில் ஒரு பெண்மணி இருந்தாராம்..
திருவாபரணம் என்றே அவரை அழைப்பார்களாம்..
திருநாங்கூர் திவ்ய தேசப் பெருமான்களுக்கு திருவாபரணம் செய்வதற்காய்..
பலரிடமும் நிதி திரட்டி.. ஆபரணங்கள் செய்து அனுப்புவாராம்..
அவர் மிகச் சிறந்த கவிஞரும், பாடகியும் கூடவாம்..
அவரே இயற்றிப் பாடியதே இந்தப் பாடலாம்..
நூற்றெட்டுத் திவ்யதேசப் பெருமான்களையும் எழுப்பும் திருப்பள்ளி எழுச்சி..
குழந்தைகளை எல்லாம் உட்கார வைத்துச் சொல்லித் தருவாராம்..
அன்று கற்றதை இன்றும் நினைவில் வைத்தபடி இன்று அவர் பாடிய இந்தப் பாடலைக் கேளுங்கள்..
நூற்றெட்டு திவ்யதேசப் பெருமான்களையும் இப் பாட்டின் மூலம் அறியலாம்..
******************
#thiruparkadal
#திருப்பாற்கடல்
#ஆன்மிகம்
#வைணவம்
#ஆழ்வார்கள்
#தமிழ்
#பக்தி
#பிரபந்தம்
...
https://www.youtube.com/watch?v=hD5SflfM3qs