குலம் தரும் கல்விதரும்.....
பெற்ற தாயினுமாயின செய்யும்....
நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா எனும் நாமம்.
என்றுரைத்த கலியன்
நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்.....
கார்வானத்துள்ளாய் கள்வா......
என்று நம் நாரணனை பலவாறு அழைத்து தன் மன ஓட்டத்தை பாசுரங்களால் வெளிபடுத்தினார்.
அவரின் பாசுரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருநெடுந்தாண்டகம்.
பட்டர் மிகவும் உகந்தது இத்திருநெடுந்தாண்டகம்.
அவற்றில் உள்ள சிறப்புகள் பற்றி விவரிக்கிறார்கள் மணப்பாக்கம் கோமான் ஶ்ரீதரன் மற்றும் கோமான் இரகுநாதன் அவர்கள்.
#thiruparkadal
#திருப்பாற்கடல்
#ஆன்மிகம்
#வைணவம்
#ஆழ்வார்கள்
#பிரபந்தம்
#ஆசார்யர்கள்
#தேசிகர்
#மணவாளமாமுனிகள்
...
https://www.youtube.com/watch?v=12orHaU5_Os
திண்திமிலேற்றின் மணியும்,
ஆயன் தீங்குழலோசையும்,
தென்றலோடு
கொண்டதோர் மாலையும்,
அந்தியீன்ற
கோல இளம் பிறையோடு கூடி
பண்டைய வல்ல இவை நமக்குப்
பாவியேனாவியை வாட்டம் செய்யும்
கொண்டல் மணி நிற வண்ணர்
மன்னு குறுங்குடிக்கே
என்னை உய்த்திடுமின்.
பெரிய திருமொழி
ஒன்பதாம் பத்து
ஐந்தாம் திருமொழி
திருமங்கை ஆழ்வார்
என்னை அங்கு
கொண்டுபோய்ச்
சேர்த்து விடுங்களேன்..
திடமான திமிலைக் கொண்ட
காளையின் கழுத்து மணியும்..
ஆயர்களின் இனிய
புல்லாங்குழல் இசையும்..
தென்றல் காற்று வீசும்
இனியதோர் மாலைப்பொழுதும்..
இவையெல்லாம் போதாதென்று..
பால சந்திரனும் சேர்ந்து..
பாவியான என் உயிரை
வதைக்கிறது.. பாருங்களேன்..
ஒருகாலத்தில்
இனிமையாகத் தோன்றிய
இவை யாவும்.. இப்போது
இனிமை தருவதில்லை..
கார்மேகமும்..
நீலமணியும் போன்ற
நிறத்துடைய என் நம்பி..
திருக்குறுங்குடியில்..
எழுந்தருளியிருக்கிறான்..
என்னை அங்கே
கொண்டுபோய்
சேர்த்து விடுங்களேன்..
கோமான் இரகுநாதன்
-------------------------------
#thiruparkadal
#திருப்பாற்கடல்
#வைணவம்
#ஆழ்வார்கள்
#பக்தி
#பிரபந்தம்
#Paamaalai
#பாமாலை
...
https://www.youtube.com/watch?v=9F9_4HDLiec