கொண்டை கொண்ட
கோதை மீது
தேனுலாவு கூனிகூன்
உண்டை கொண்டு
அரங்க ஒட்டி
உள்மகிழ்ந்த நாதனூர்
நண்டை உண்டு நாரைபேர
வாளைபாய நீலமே
அண்டை கொண்டு
கெண்டை மேயும்
அந்தண் நீர் அரங்கமே.
திருச்சந்த விருத்தம்
திருமழிசையாழ்வார்
ஆழ்வார்
கூனியை எவ்வளவு
அழகாய் வர்ணிக்கிறார்?
கொண்டை..
அந்தக் கொண்டையானது
மாலைகளால் சூழப்பட்டுள்ளது..
அந்த மலர்மாலைகளை
வண்டினம் சுற்றுகின்றன..
ஆகா.. இவ்வளவு அழகா.. என்று
நாம் நினைக்கும் போதே..
கூனி என்கிறார்..
அந்தக் கூனியான..
மந்தரையின்..
முதுகு வீக்கத்தில்..
தனது வில்லிலே.. மண்
உருண்டைகளையே அம்பாக்கி..
இராமன் மறைந்திருந்து எய்து..
அவள் கோபத்துடன் திரும்ப..
தனது குறிகள்
தோற்கப்படாமைக்காக
இராமன் மகிழ்வானாம்..
அந்த ஸ்ரீராமன்
எழுந்தருளியுள்ள திவ்யதேசம்..
காவிரிக் கரையில்
நண்டைத் தின்று நாரை நடக்க..
நாரையைக் கண்டு
வாளைமீன் துள்ள..
நெய்தல் மலர்களை அரணாக்கி
கெண்டை மீன்கள்
அச்சமின்றி உலாவுகின்ற..
அழகிய.. குளிர்ந்த..
நீர்வளமுடைய
திருவரங்கம் ஆகும்..
கோமான் இரகுநாதன்
#thiruparkadal
#திருப்பாற்கடல்
#ஆன்மிகம்
#வைணவம்
#ஆழ்வார்கள்
#தமிழ்
#பக்தி
#பிரபந்தம்
#ஆசார்யர்கள்
#தேசிகர்
#மணவாளமாமுனிகள்
#Paamaalai
#பாமாலை
...
https://www.youtube.com/watch?v=JZwrDnJNiy8