அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னல் உறுதியேல்; நம்பீ!
செப்பிள மென்முலையார்கள்
சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும்,
சோத்தம், பிரான்! இங்கே வாராய்.
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து
நான்காம் திருமொழி
கண்ணா!
அதோ மறைவில் நின்று
கோபியர் அனைவரும்
நீ குளிக்க அடம்பிடிப்பதை
கேலி பேசிச் சிரிக்கிறார்கள்!!
பாலில்
வெல்லத்தைக் கரைத்து
சர்க்கரைப் பொங்கலும்,
சுவையான அப்பமும்,
நான் உனக்காகவே
செய்து வைத்துள்ளேன்!!
என் கண்ணா!!
அவை உனக்கு
வேண்டுமல்லவா?
உனக்கு அவைகள்
வேண்டுமெனில்
நீராட வா!!
உன்னை வணங்கிக்
கேட்டுக் கொள்கிறேன்!
என் கண்ணனே!
நீராட வா கண்ணா!!
கோமான் இரகுநாதன்
#thiruparkadal
#திருப்பாற்கடல்
#ஆழ்வார்கள்
#பிரபந்தம்
#ஆசார்யர்கள்
#தேசிகர்
#மணவாளமாமுனிகள்
#Paamaalai
#பாமாலை
...
https://www.youtube.com/watch?v=5LdhuKfZIbo
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்
மார்கழி மாதம்
24 ஆம் நாள்
பரமபத நாதர் சந்நிதியில்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ,
உற்சவர் - குன்று குடையா எடுத்த குமரன் திருக்கோலத்தில்
சிறப்பு படங்கள்
Thanks Srirengavilasam
...
https://www.youtube.com/watch?v=JqBGeYEd7Js