#சாய்பாபா – கௌரவப் பாடகர்
எழுபதுகளில் தமிழ்த் திரையிசைப் பாடல்களில் பிரபல பின்னணி குரல்களோடு ஏதாவது விசேஷமாக ஒரு ஆங்கில பகுதியை பாடும் ஒரு கௌரவப் பாடகர் உண்டென்றால், அது #சாய்பாபா அவர்கள் தான். எல்லோருக்கும் இவரது பெயரும், பங்களிப்பும் மனதில் இருந்தாலும் திரையுலகமும் ரசிகர்களும் இவரை பெருசாக கண்டு கொள்ளவேயில்லை என்பது தான் உண்மை.
யார் இந்த #சாய்பாபா? பழம்பெரும் நடிகர் திரு.டி.எஸ்.பாலையா அவர்களின் மூத்த புதல்வர் தான் இவர். ஜூனியர் பாலையாவும், நடிகை மனோசித்ராவும் இவரது உடன் பிறப்புகளாம். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் கிட்டார் வாசிப்பவராகவும் இருந்திருக்கிறார்.
திரையில் நாகேஷுக்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார். ’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ‘ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு” மற்றும் ’வீட்டுக்கு வீடு’ படத்தில் ‘மலர்களில் படுத்தவள் சகுந்தலை ஆனாளே’ ஆகிய பாடல்கள் #சாய்பாபா பாடியவை தான். நடிகர் திலகத்திற்காக ‘தங்கைக்காக’ படத்தில் ‘வெள்ளிகிழமை ராத்திரி நேரம்’ பாடலையும் பாடியிருக்கிறார்.
இசைஞானி இளையராஜா அவர்கள் தன் ஆரம்ப காலங்களில் வெஸ்டர்ன் (மேற்கத்திய) இசை கற்றுக் கொள்ள நினைத்தாராம். அப்போது திருமதி.கமலா (யார் என்று தெரியவில்லை) அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பல இசைக் கலைஞர்களை உருவாக்கிய தன்ராஜ் மாஸ்டரிடம் அவரை கூட்டி சென்று அறிமுகப் படுத்தியது இந்த #சாய்பாபா தானாம்.
“சாய்பாபா” என்ற மிக பிரபலமான பெயரை இவர் கொண்டதாலோ என்னவோ இணையத்தில் மூலம் இந்த கலைஞன் குறித்து அதிக விவரங்களை அறிய இயலவில்லை.. தெரிந்தவர்கள் பகிரலாம்.
1981-ஆம் ஆண்டு வரை #சாய்பாபா அவர்கள் குரல் கொடுத்த சில பாடல்கள்:
1. ஹலோ மை டார்லிங் இப்போ (எங்கிருந்தோ வந்தாள்)
2. அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ (வீட்டுக்கு வீடு)
3. பல்லாண்டு பல்லாண்டு (முஹமது பின் துக்ளக்)
4. நாளை நாமொரு ராஜாங்கம் (புன்னகை)
5. வெள்ளிகிழமை ராத்திரி நேரம் (தங்கைக்காக)
6. உன்னைத் தொடுவது இனியது (உத்தரவின்றி உள்ளே வா)
7. பாட்டுக்காரன் பாடி (திக்கு தெரியாத காட்டில்)
8. ஏன்னா நீங்க எங்க (ராமன் தேடிய சீதை)
9. பாடி பாடி (பாக்தாத் பேரழகி)
10. அம்மா அப்பா சண்டையிலே (கட்டிலா தொட்டிலா)
11. கடவுள் அமைத்து வைத்த (அவள் ஒரு தொடர்கதை)
12. இங்கே நான் பருவகுமாரி (நான் அவனில்லை)
13. தத்திச்செல்லும் முத்து (தங்கபதக்கம்)
14. ராஜவீதி பவனி என்பது (அன்பே ஆருயிரே)
15. தொட்ட இடமெல்லாம் (இதயக்கனி)
16. இவர்கள் நமது பங்காளிகள் (மன்னவன் வந்தானடி)
17. லவ் இஸ் எ கேம் (நாளை நமதே)
18. நாட்டுக்கு காவல் (பயணம்)
19. தீர்த்தத்தில் விழுந்த வண்டு (வாழ்வு என் பக்கம்)
20. ஆணாட்டம் பெண்ணாட்டம் (என்னை போல் ஒருவன்)
21. எல்லோரும் பொறந்தோமே (அகல் விளக்கு)
22. ஹே ஒண்ணா ரெண்டா (கன்னித்தீவு)
#இணையத்திலிருந்து_தொகுத்தது
நன்றி..திரு.செல்வக்குமார்.